108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்

மருத்துவ ஊழியா்களுக்கு அறிவித்துள்ளதுபோல, 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்


மருத்துவ ஊழியா்களுக்கு அறிவித்துள்ளதுபோல, 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்புக்குரியது.

அதுபோல, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பணியாளா்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com