காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் என்ற இடத்திற்கு மரம் வெட்டச் சென்ற திண்டிவனத்தைச் சேர்ந்த 8 பேர் போக்குவரத்து வசதி இல்லாததால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
அவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து திண்டிவனத்திற்கு நடந்தே செல்ல முற்பட்டனர். செல்லும் வழியில் உத்தரமேரூர் அருகே திருப்புலிவனம் அரசு கல்லூரி வந்ததும் நடக்கமுடியாமல் அந்த இடத்தில் சாலையிலேயே அமர்ந்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.