மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல்

மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.
மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல்

மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நடிகர் விமல் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தி கொண்டு இருந்து வரும் நடிகர் விமல், தனது சொந்த கிராமமான பன்னாங்கொம்பு பகுதியில் இன்று கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 

அப்போது ஊராட்சி நிர்வாகம் மூலம் தெளிக்கப்பட்டு வரும் கிருமி நாசினி கருவியை நடிகர் விமல் வாங்கிகொண்டு பன்னாங்கொம்பு கிராம வீதிகளில் சென்று தானே கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டார். திரை நட்சத்திரம் கிராமப்புறத்தில் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com