ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களில், விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,500 மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவை கிடைக்க நியாய விலைக்கடைகள் திறந்துள்ளன.
இந்நிலையில், ஊரடங்கின்போது பணியாற்றும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, விற்பனையாளருக்கு தலா ரூ.5,000 மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.4000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விற்பனையாளருக்கு தலா ரூ.2,500 மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: