புதிதாக கரோனா பாதித்த 7 பேர் யார்? யார்?

தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு 74 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கரோனா பாதித்த 7 பேர் யார்? யார்?

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது புதிதாக கரோனா பாதித்தவர்களுடன் சேர்த்து 74 பேருக்கு கரோனா பாதப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார்.

தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்னும் 119 பேர் மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அந்த 7 பேர் யார் யார்?

  • நோயாளி 68 : 43 வயது ஆண் (நோயாளி-36 உடன் தொடர்பில் இருந்தவர்) பொழிச்சலூரைச் சேர்ந்தவர். திருவனந்தபுரம் சென்று வந்துள்ளார். தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • நோயாளி 69 : 28 வயது ஆண் - திருவண்ணாமலையில் கரோனா பாதித்த நோயாளி-30 உடன் பணியாற்றியவர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • நோயாளிகள் 70 - 72 : மூன்று ஆண்கள் - விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள். மூவரும் தில்லி சென்று வந்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • நோயாளிகள் 73 - 74: இரண்டு ஆண்கள் - மதுரையைச் சேர்ந்தவர்கள். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தில்லி சென்று வந்துள்ளனர்.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com