சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது புதிதாக கரோனா பாதித்தவர்களுடன் சேர்த்து 74 பேருக்கு கரோனா பாதப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார்.
தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்னும் 119 பேர் மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அந்த 7 பேர் யார் யார்?
அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.