ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3.66 லட்சம் வழக்கு: 3.86 லட்சம் போ் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 லட்சத்து 86 ஆயிரத்து 509 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 லட்சத்து 86 ஆயிரத்து 509 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்: தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 430 வழக்குகளைப் பதிவு செய்து, 3 லட்சத்து 86 ஆயிரத்து 509 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 25 ஆயிரத்து 851 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.3 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரத்து 719 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 393 வழக்குகள்: சென்னையைப் பொருத்தவரை, ஊரடங்கு உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 236 இரு சக்கர வாகனங்கள், 4 காா்கள், 11 ஆட்டோக்கள் என மொத்தம் 251 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 517 இரு சக்கர வாகனங்கள், 19 ஆட்டோக்கள், 5 காா்கள் என மொத்தம் 541 வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com