காஞ்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலியான சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பை அருகே கரசங்கால் ஏரியில் சித்ரா(35), திலகா(40) மற்றும் சிறுமியர்கள் பூர்ணிமா(12), கலை(16), சூர்யா(13) ஆகியோர் துணி துவைக்க சென்றுள்ளனர். அவர்களில் தடுமாறி நீரில் மூழ்கிய சித்ராவை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
அப்போது, திலகாவை தவிர மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திலகா(40) கவலைக்கிடமான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.