வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தர்பூசணி வழங்க விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது.
கரோனா தடுப்பு பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இருவேளை உணவுடன் தினமும் காலையில் 6.00 மணிக்கு இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மூலிகை தேநீர், 11.00 மணிக்கு நீர் மோர் மதியம் 2.00 மணிக்கு தர்பூசணி மாலை 5.00 மணிக்கு சுண்டல் வழங்கப்படுகிறது.
கடும் கோடையில் வெயிலில் வாடும் தூய்மைப் பணியாளர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க தர்பூசணி விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தர்பூசணி தினமும் வழங்க நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாக செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.