தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 56,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 லட்சத்து 75,596 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 3 லட்சத்து 56,526 வழக்குகளைப் பதிவு செய்து 3 லட்சத்து 75,596 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.3 கோடி 64 லட்சத்து 60,219 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 84 இரு சக்கர வாகனங்கள், 7 காா்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 434 இரு சக்கர வாகனங்கள், 14 ஆட்டோக்கள், 8 காா்கள் என மொத்தம் 456 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.