தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

அத்துடன் மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மேலும் இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் மே 18க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com