தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் அடங்குவர். 

எட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 3 வயதில் ஒரு சிறுமி, இரண்டு வயதில் ஒரு சிறுமி என இன்று மட்டும் நான்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பிறந்து ஒருநாளே ஆன குழந்தை, 2 மாதங்கள் மற்றும் 16 மாதங்கள் ஆன குழந்தை என 11 ஆண் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் அனைத்தும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 

தமிழகம் முழுவதும் 329 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று தமிழக சுகாதாரத் துறை சென்னையில் தற்போது 3,350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com