கரோனா: தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி

​தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 798 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 514, பெண்கள் 284. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 11,584 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,43,952 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com