காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை வரை 572 தொழிற்சாலைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக 2,18,741 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் பொது முடக்கம் காரணமாக 92230 தொழிலாளர்கள் மட்டுமே பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது மொத்த தொழிலாளர்களில் 42 சதவிகிதமாகும்.தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்களை சமூக இடைவெளியைத் தவறாது கடைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவுடன் 14,775 வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.