கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக ஏற்கெனவே கேட்டிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அரசிடம் ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனையின்போது தற்போதைக்கு சென்னையில் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்: