சீர்காழியில் இசைக்கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.
கரோனா தீநுன்மி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 110 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.
அப்போது நகரச் செயலாளர் அ.பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ராஜமாணிக்கம், கேஎம்.நற்குணன், பேரூர் கழக செயலாளர் போகர்.சி.ரவி உடனிருந்தனர்.