சென்னையில் உயர் அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் 100 பேருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சென்னையில் உயர் அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் 100 பேருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது. 

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை 100 யைத் தன்னடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் அடங்குவர். 

சென்னையில் 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் மற்றும் கூடுதல் காவல் ஆணையருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தற்போது வைரஸ் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த பல காவலர்களின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com