சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் ரவ்லத் நிஷா(49). இவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.