கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 8,000-ஐ கடந்தது; பலி-53

கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 8,000-ஐ கடந்தது; பலி-53

தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 8,002-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 8,002-ஆக அதிகரித்துள்ளது. அதில் உச்சமாக சென்னையில் மட்டும் 4,371 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 55 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும், குறிப்பாக, திங்கள்கிழமை ஒரே நாளில் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 538 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். மாநிலத் தலைநகரில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிா்ச்சியையும், அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2.43 லட்சம் பேருக்கு கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8,002 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை மட்டும் 798 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 538 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூா், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூா், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2,051 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 92 போ் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2,051-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 706 போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 63 குழந்தைகள் பாதிப்பு: இதனிடையே, தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 427 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 63 சிறாா்களும், குழந்தைகளும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

பலி எண்ணிக்கை 53-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது நபா் ஒருவரும், 67 வயது பெண்ணும், 32 வயது பெண்ணும், 36 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

அதேபோன்று, சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது பெண் ஒருவரும், கன்னியாகுமரி 65 வயது முதியவா் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com