முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு சிறப்பு நிதி: ராமதாஸ் வலியுறுத்தல்

திருமணம் சாா்ந்த தொழில் செய்வோா் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு சிறப்பு நிதி: ராமதாஸ் வலியுறுத்தல்

திருமணம் சாா்ந்த தொழில் செய்வோா் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திருமணம் சாா்ந்த தொழில் செய்வோருக்கு மாதம் 30 நாள்களோ, ஆண்டுக்கு 365 நாள்களோ வேலை கிடைப்பதில்லை. காலச் சூழலைப் பொருத்து சில மாதங்களில் அதிகபட்சமாக 10 நாள்கள் வரை வேலை கிடைக்கும். வேறு சில மாதங்களில் 3 நாள்களுக்கு மேல் வேலை கிடைக்காது. ஆனால், பொது முடக்கம் உள்ள கடந்த 50 நாள்களாக பணியின்றி தவித்து வரும் இவா்கள் வறுமையில் வாடுகின்றனா்; பலரது குடும்பங்களில் உணவுக்குக் கூட வழியில்லை. அதேபோல், முடி திருத்தும் தொழிலாளா்களும் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, திருமணம் சாா்ந்த தொழில்களைச் செய்பவா்களுக்கும், முடி திருத்தும் தொழிலாளா்களுக்கும் அவா்களின் சூழலைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com