முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367 கோடி அளவுக்கு நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367 கோடி நிதியுதவி

சென்னை: கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367 கோடி அளவுக்கு நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது,  தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து 5.5.2020 அன்று வரை மொத்தம் 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 6.5.2020 முதல் 14.5.2020 வரை உள்ள ஒன்பது நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

 சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் 5 கோடி ரூபாய்
 சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 2 கோடி ரூபாய்
 மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்
 சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், மணலி 1 கோடி ரூபாய்
 பைஜுஸ், 1 கோடி ரூபாய்
 ரானே டிஆர்டபிள்யு ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் 45 லட்சம் ரூபாய்
 ரானே ஹோல்டிங்ஸ் 25 லட்சம் ரூபாய்
 ரானே என்எஸ்கே ஸ்டீரிங் சிஷ்டம் பிரைவேட் லிமிடெட் 20 லட்சம் ரூபாய்
 ரானே (மெட்ராஸ்) லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
 ரானே பிரேக் லைனிங் லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
 மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் 31 லட்சத்து 15 ஆயிரத்து 804 ரூபாய்
 தமிழ்நாடு பான் புரோக்கர்ஸ் அண்டு ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் 31 லட்சம் ரூபாய்
 மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
 ஆனந்தம் பவுண்டேஷன் 25 லட்சம் ரூபாய்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் 50 லட்சத்து 67 ஆயிரத்து 908 ரூபாய்
 இந்தியன் ஆயில் நிறுவனம் 1 கோடி ரூபாய்
 மாநில திட்ட இயக்குநரகம் 93 லட்சத்து 28 ஆயிரத்து 340 ரூபாய்
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 76 லட்சத்து 49 ஆயிரத்து 666 ரூபாய்
 மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர் 10 லட்சம் ரூபாய்
 எம்இபிசிஓ ஷெயிங் மெட்ரிகுலேஷன் பள்ளி 15 லட்சத்து 7 ஆயிரத்து 430 ரூபாய்
 பிஆர் சுந்தர் மேன்சன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
 அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை 27 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்
 கோயம்புத்தூர் மாநகராட்சி 13 லட்சத்து 66 ஆயிரத்து 664 ரூபாய்
 அல்ட்ரா மெரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 ஸ்ரீ சரவணா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்

மேற்கண்ட ஒன்பது நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 19 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 903 ரூபாய் வரப்பெற்றுள்ளது. 14.5.2020 வரை பெறப்பட்ட மொத்த தொகை 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் ஆகும். 

மேற்கண்ட நாட்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், கரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com