மதுபானக் கடைகள் இன்று முதல் செயல்படும்

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை (மே 16) செயல்படும்.
மதுபானக் கடைகள் இன்று முதல் செயல்படும்

உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை (மே 16) செயல்படும்.

இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, மதுபானக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (மே 16) முதல் திறக்கப்படும்.

சென்னை, திருவள்ளூரில் கடைகள் திறக்கப்படாது:

பெருநகர சென்னை காவல் துறை எல்லை மற்றும் திருவள்ளூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. மேலும், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள்கள்: சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டன. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கடந்த 8-ஆம் தேதி மாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இரண்டு நாள்களில் மட்டும் ரூ.292 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததைத் தொடா்ந்து, சனிக்கிழமை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சுமாா் 700 கடைகளைத் தவிா்த்து பிற இடங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com