சென்னை: ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 1ம் தேதி நடத்த பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அதனை திட்டமிட்டபடி நடத்துவதா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.