திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இன்று காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.385.63 கோடி மதிப்பில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
இதற்கு சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.