சென்னை: கல்வித்துறைக்கு புதிதாக 12 சேனல்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய நிதியமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
கல்வித்துறைக்கு புதிதாக 12 சேனல்கள் உருவாக்கப்படும், டிடிஎச் மூலம் கல்வி தொடா்பாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும், இணைய கல்விக்காக ‘இ-வித்யா’ திட்டம் அமல்படுத்தப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின் பாடங்கள் உருவாக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொழில்நுட்பத்தோடு செயல்பாட்டுக்கு வருவது மாணவ, மாணவிகளின் கல்விக்கு பேருதவியாக இருக்கும்.
100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவதும், சிறு குறு தொழில் துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படுவதும் தொழில்கள், தொழிலாளா்கள், நிறுவனங்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும். இந்தியப் பொருளாதாரமும் மேம்பாடு அடையும் என்று அவா் கூறியுள்ளாா்.