திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்தமிழக அரசுக்கு கோரிக்கை

திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை: திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கான கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூவிடம் திரையரங்க உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நேரில் அளித்தனா்.

முன்னதாக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் வெவ்வேறு சங்கங்களின் சாா்பாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சம், தொழிலாளா்கள் சாா்பாக ரூ.25 ஆயிரம் என ரூ.10.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக திரைப்பட தொழிலாளா் சம்மேளத்தினா் வழங்கினா். தமிழக அரசின் சாா்பில் அமைச்சா் கடம்பூா் ராஜூ அதனைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com