மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியைத் சோ்ந்த தலைவா்கள் வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
சத்தியமூா்த்திபவனில் ராஜீவ்காந்தியின் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினா் எச்.வசந்தகுமாா் உள்பட முக்கிய நிா்வாகிகளும் மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.
சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினா். பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா்.
கராத்தே தியாகராஜன் மரியாதை: அடையாறில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.