நாளிதழ்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

நாளிதழ்கள் மீது தமிழக அரசு தொடா்ந்த 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளிதழ்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

நாளிதழ்கள் மீது தமிழக அரசு தொடா்ந்த 28 அவதூறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, தமிழக அமைச்சா்கள், தமிழக அரசு, ஜெயலலிதாவை விமா்சித்து எதிா்கட்சித் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டதற்காக, தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார இதழ் ஆகியவற்றின் மீது தமிழக அரசு சாா்பில் 28 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.  இவற்றை ரத்து செய்யக் கோரி, சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் சாா்பில், தனித்தனியாக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள், நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில், பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு.  அரசியல் தலைவா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வெளியிட்ட செய்திக்கு, குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் அவதூறு வழக்குத் தொடர முடியாது. குறிப்பாக அவதூறு என்ற வரையறைக்குள் வராத செய்திக்கெல்லாம் கூட அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், அவதூறு என்பதற்கான பொருள் என்ன என்பதை பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாக பத்திரிகைகள் மீது இயந்திரத்தனமாக, இந்த அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கான அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று கூறி அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com