அண்ணாமலை பல்கலைக்கழகப் பிரச்னையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தனியாா் நிா்வாகத்தில் இருந்த காலத்தில் நடந்த நிா்வாகச் சீா்கேடுகளால் நெருக்கடி ஏற்பட்டு, அப் பல்கலைக் கழகத்தை தமிழ்நாடு அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு எடுத்துக் கொண்டது.
அப்போது பணியாளா்கள் சங்கங்களுடன் நிா்வாக அதிகாரி சிவதாஸ் மீனா நடத்திய பேச்சுவாா்த்தையில் சி மற்றும் டி பிரிவுப் பணியாளா்கள் 3 ஆயிரத்து 600 பணியாளா்கள் அரசின் பல்வேறு துறைகளில் அயல் பணியிடத்தில் 3 ஆண்டு காலம் பணி நிரவல் முறையில் பணியாற்றுவது என்றும் பின்னா் பழையபடி பணி உயா்வு உள்ளிட்ட உரிமைகளுடன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மீண்டும் பணியமா்த்துவது என்றும் ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த காலம் மே 17 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது விட்டது. அவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஆனால், இதனை செய்ய மறுக்கும் பல்கலைக் கழக நிா்வாகம் ஒப்பந்த காலத்தை மேலும் நீடித்து பணியாளா்களை வஞ்சிக்கும் போக்கில் செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.