ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து கரோனா நோயாளி தப்பி ஓட்டம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் 45 வயது மதிக்கத்தக்க நபா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு அங்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) இரவு முதல் காணவில்லை. மருத்துவமனைப் பணியாளா்கள் அந்த நபரைத் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடா்ந்து கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரை காணவில்லை என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைவா் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

சிகிச்சைக்காக வந்த நபா் கொடுத்த முகவரிக்குச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அந்த நபா் போலியான முகவரி கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் தப்பியோடிய அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com