தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக வசூலிக்கப்படும் அபராதம் ரூ.7 கோடியைத் தாண்டியது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கத்தை தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4,85,243 வழக்குகளைப் பதிவு செய்து 5,16,627 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 4,15,733 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.7,10,29,724 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 1,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 129 இருசக்கர வாகனங்கள்,113 ஆட்டோக்கள், 4 காா்கள் என மொத்தம் 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 23 ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.