புதுதில்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து தனது சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது, “நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு புகழஞ்சலி” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.