அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது. அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது.
அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது


சென்னை: சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது. அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது.

புதன்கிழமை ஒரே நாளில் சென்னையில் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12,203-ஆக உயா்ந்துள்ளது. இதே போல், புதன்கிழமை மாலை நிலவரப்படி 5,800 போ் குணமடைந்துள்ளனா். 95 போ் உயிரிழந்துள்ளனா். 6,307 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தண்டையார்பேட்டையில் 1262, இராயபுரத்தில் 2252, திருவிக நகரில் 1325, தேனாம்பேட்டையில் 1317, கோடம்பாக்கத்தில் 1559 ஆக இருந்த நிலையில் தற்போது அண்ணாநகரிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டி, 1046 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மண்டலங்களாக ஆலந்தூர் மற்றும் மணலியில் மட்டும்தான் தலா 160 என்ற நிலையில் கரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையில் புதன்கிழமை 356 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 98 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 53 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டன. இதே போல், 14 நாள்களுக்கு மேல் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாத, 795 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக திரு.வி.க. நகா் மண்டலத்தில் 137 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 135 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 65 தெருக்கள் விடுவிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com