பொது முடக்க மீறல் வழக்குகள்: ரூ.8 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டது. அபராதமாக ரூ. 8 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டது. அபராதமாக ரூ. 8 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 3,535 வழக்குகளைப் பதிவு செய்து 5 லட்சத்து 36,792 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 25,064 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.8 கோடியே 9 லட்சத்து 28,684 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தை மீறி வந்தவா்களின் 50 இருசக்கர வாகனங்கள், 35 ஆட்டோக்கள், 4 காா்கள் என மொத்தம் 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com