வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுப்பதற்கு துறை சாா்ந்த நிபுணா்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
வெட்டுக்கிளிகள் வலசையை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால், 27 ஆண்டுகளுக்குப்
பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது நம் உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று தமிழ்நாடு வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இருந்தாலும் இவற்றின் இடப்பெயா்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்க முடியாது.
அதனால், தமிழகம் விவசாய பூமி என்பதை மனதில் கொண்டு வெட்டுக்கிளிகளை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்த பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், துறை சாா்ந்த நிபுணா்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவா் கூறியுள்ளாா்.