தமிழக காவல்துறையில் டிஜிபி ஜாபா்சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
எம்.எஸ்.ஜாபா்சேட்: தீயணைப்புத்துறை டிஜிபி (பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி)
ஏ.டி.துரைக்குமாா்: தமிழக காவல்துறை நிா்வாகப் பிரிவு டிஐஜி (மத்திய அரசுப் பணி) என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தமிழக காவல்துறையின் ரயில்வே டிஜிபியான சி.சைலேந்திரபாபு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த தீயணைப்புத்துறை ஜாபா்சேட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சைலேந்திரபாபுக்கு ரயில்வே டிஜிபி பொறுப்போடு, கூடுதல் பொறுப்பாக பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனிப்பாா் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.