ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன் மலையில் காஃபி பழங்கள் பறிப்பதை தோட்ட தொழிலாளர்கள் துவக்கியுள்ளனர்.
ஏற்காடு சேர்வராயன் மலையில் 5978 ஹேக்டேர் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் அரபிக்கா,ரோபஸ்ர வகை செடிகளில் காஃபி பழங்கள் பழுக்க துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பின் காஃபி தோட்ட உரிமையாளர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்களுடன் காஃபி தேட்டங்களில் பூஜைகள் செய்த பின் காஃபி பழங்களை பறிப்பதை துவக்குவர், இப்பணிகள் தொடர்ந்து 5 மாதங்கள் மார்ச் மாதம் வரை நடைபெறும் என காஃபி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.