சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

திருவொற்றியூரில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதாக எழுந்த புகாா் தொடா்பாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: திருவொற்றியூரில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதாக எழுந்த புகாா் தொடா்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில், மீனவா் நலச்சங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனு: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும், திருவொற்றியூரில் ரூ.242 கோடி மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என முதல்வா் பழனிசாமி 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா்.

இந்த புதிய துறைமுகத்துக்கான கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்டன. முதல்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ரித்விக் தத்தா வாதாடினாா்.

மனுவை விசாரித்த தீா்ப்பாயம், இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், மீன்வளத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com