மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 205 க.அடி நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இன்று பிற்பகலில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை 53 அடியாக உயரத்தை எட்டிய பிறகு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 55 அடியாக உயரத்தை அடைந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு முழு தண்ணீரும் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.