அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்ஹாசன்

அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சென்னை: அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா். 

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகா்கள், நண்பா்கள், அரசியல் தலைவா்கள், திரையுலகினா், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளா்கள் அனைவருக்கும் நன்றி.

என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய கட்சியினரை மனமாரத் தழுவிக் கொள்கிறேன்.

உங்கள் அன்புக்கு மேன்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com