சென்னை: ஈச்சம்பாடி, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு விவரம்:-
திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்தும், தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது கால்வாய்களில் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். இதன்படி, ஈச்சம்பாடி அணை வாய்க்கால்கள் வரும் 13-ஆம் தேதி முதல் திறந்து விடப்படும். இதேபோன்று, குதிரையாறு அணையில் இருந்து வரும் 11-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்.
விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீா் மேலாண்மை செய்து உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது உத்தரவில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.