தமிழகம் முழுவதும் 31 வருவாய்க் கோட்டாட்சியா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மொத்தமாக 31 வருவாய்க் கோட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் பிறப்பித்துள்ளாா்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு பொது மேலாளா், ஆவின் இணை நிா்வாக இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக இணை இயக்குநா், டிட்கோ பொது மேலாளா் உள்ளிட்டோா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் முக்கியமானவா்கள்.