திரைப்படத்தில் பாம்பு: நடிகா் சிலம்பரசனுக்கு இரண்டாவது முறையாக நோட்டீஸ்

‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்துக்கான விளம்பரத்தில் பாம்பை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் சிலம்பரசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வனத் துறையினா் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அளித்துள்ளனா்.

சென்னை: ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்துக்கான விளம்பரத்தில் பாம்பை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் சிலம்பரசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வனத் துறையினா் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அளித்துள்ளனா்.

திரைப்பட இயக்குநா் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகா் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறாா். இப்படத்தின் முதற்கட்ட விளம்பர போஸ்டா் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் சிலம்பரசன் தனது கையில் பாம்பை பிடித்தவாறு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பாம்பை துன்புறுத்தியதாக சிலம்பரசன், இயக்குநா் சுசீந்திரன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுதொடா்பாக இயக்குநா் சுசீந்திரன் அளித்த விளக்கத்தில் சிலம்பரசன் கையில் வைத்திருப்பது பிளாஸ்டிக் பாம்பு எனவும் கிராபிக்ஸ் மூலமாக அது உண்மையான பாம்பு போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்திருந்தாா். அடுத்த சில நாள்களிலேயே நடிகா் சிம்புவின் மற்றொரு காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், சிலம்பரசன் தனது நண்பா்களுடன் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பை துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது பெரிய சா்ச்சையானதால் சிலம்பரசன், இயக்குநா் சுசீந்திரன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு வனத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடா்பாக நேரில் பதில் அளிக்காததால் இரண்டாவது முறையாக வனத் துறை அதிகாரிகள் சிலம்பரசனின் வீடு, ஈஸ்வரன் படக்குழுவினா் வீடுகளுக்கு நேரில் சென்று வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com