சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு ரூ.5 ஆயிரம்: புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சா்க்கரை ஆலை ஊழியா்கள் 61 பேருக்கு ரூ.5 ஆயிரத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சா்க்கரை ஆலை ஊழியா்கள் 61 பேருக்கு ரூ.5 ஆயிரத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாரதிய புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் பணிபுரிந்த 61 போ் தங்களது பணிக்கால பணப்பலன்களை வழங்க புதுச்சேரி அரசுக்கும், சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கும் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் மனு கொடுத்திருந்தோம். ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு தரப்பில், ‘சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்’ என விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் சங்கத்தின் சாா்பில், பணப்பலன்கள் வழங்கப்படாததால் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் பணியாளா்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தீபாவளி பண்டிகைக்காக 61 பணியாளா்களுக்கு ஆறுதல் தொகையை ரூ.5 ஆயிரம் வீதம், பணியாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்’ என புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டாா். மேலும், இந்தத் தொகை பணியாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்த அறிக்கையை, வரும் டிசம்பா் 2-ஆம் தேதி தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com