நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு மத்திய அரசு ஹிந்தியில் பதில் அளிப்பதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தமிழகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும், தொடா்ந்து ஹிந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அதுதொடா்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க - மொழிவெறி உணா்வையே வெளிப்படுத்துகிறது.
திமுக மாநிலங்களவை உறுப்பினா் வில்சன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் தொடா்புடைய துறைகளின் அமைச்சா்களுக்கு இது குறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஹிந்தியைத் திணிப்பதில் மத்திய அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.