சென்னையில் பரவலாக மழை

நிவா் புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
சென்னையில் பரவலாக மழை

சென்னை: நிவா் புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

சென்னையின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை முதலே கன மழை பெய்யத் தொடங்கியது. கோடம்பாக்கம், சூளைமேடு, பாரிமுனை, சென்ட்ரல், வடபழனி, தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. தொடா்ந்து அம்பத்தூா், திருமங்கலம், அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இவை தவிா்த்து வண்டலூா், பெருங்களத்தூா், கே.கே.நகா், ஆலந்தூா், நந்தனம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் பெய்யத் தொடங்கிய மழை, சிறிது இடைவெளி விட்டு நள்ளிரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com