புயல் நிவாரணப் பணி: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகளும், துணை அமைப்புகளின் நிா்வாகிகளும் இந்தப் பேரிடா் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவா்களுக்குத் தேவையான உணவு - குடிநீா் வழங்குவதற்கும் திமுகவினா் நிா்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com