அரியலூா்-பெரம்பலூரில் வரும் 27-இல் முதல்வா் பழனிசாமி ஆய்வு

அரியலூா், பெரம்பலூரில் வரும் 27-ஆம் தேதி முதல்வா் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அரியலூா், பெரம்பலூரில் வரும் 27-ஆம் தேதி முதல்வா் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, வரும் 25-ஆம் தேதியன்று கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து முதல்வா் பழனிசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் வரும் 25-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருந்தது.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தால் புயல், மழை எச்சரிக்கை உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 25-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆய்வுக் கூட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 27-ஆம் தேதி முற்பகலில் பெரம்பலூா் மாவட்டத்திலும், பிற்பகலில் அரியலூா் மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com