எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு மாயம் பெருமாள்சாமி கோவில் கும்பாபிஷேகம் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி
எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி


 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது.கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி,கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனையடுத்து மூலவர்பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அபிசேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. 

இவ்விழாவை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் மக்களும், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com