ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையின் சார்பில் தெருக்கூத்து நாடகம் மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கிருஷ்ணகி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருள்(23). இவர் ஐடிஐ படித்துள்ளார். இவர் திருமலை நாடக சபா குழு தலைவரும் தெருக்கூத்து கலைஞருமான இவர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி பெற்று ஊத்தங்கரை பகுதி பொதுமக்களுக்கு தெருக்கூத்து மூலமாக கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தின் சிறந்த கலைக்குழு மற்றும் கலைஞர்களுக்கான கரோனா விழிப்புணர்வு பாராட்டுச்சான்றிதழ் பெற்றுள்ளார்.
மேலும் தெருக்கூத்து நாடகம் மூலம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருமலை நாடக சபா குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.