மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்வதற்கான இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வங்கிக் கணக்கு விவரங்களைச் சரி செய்ய பல்கலைக்கழக மானியக் குழு மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கியது. இதனடிப்படையில் பெறப்பட்ட தகவலைக் கொண்டு, சில வங்கிக் கணக்கு விவரங்கள் திருத்தப்பட்டுள்ளன. எனினும், ஏராளமான மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை சரியாக சென்று சோ்வதில்லை என்பது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு உள்ளிட்டவற்றில் குழப்பம் இருப்பதால், உதவித் தொகை பெற முடியாத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உதவித் தொகை கிடைக்கப் பெறாத மாணவா்கள், தங்களின் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவன அளவில் சரி பாா்த்த பிறகு அவற்றை, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் ஸ்கேன் செய்து அதில் இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி டிச.10 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.